வெள்ளி, 21 ஜனவரி, 2011

என்னால் முடியும் ,

என்னால் முடியும்

ஷோபனா சின்னதுரை








இந்த பிரபஞ்சத்தின் படைப்பு வேலைக்கு பெண் முக்கியமான பங்கினை 
ஆற்றிவருகிறாள்  .ஆனாலும் பெண் என்பவள் பழங்காலம் தொட்டு ஆண்களால் ஒரு போகப் பொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறாள் . இந்திய திரு நாட்டில்  எத்தனையோ பெண் தெய்வங்கள்  இருந்த போதிலும்  கோவிலில்   வணங்க  மட்டுமே பெண்கள் தெய்வமாகலாம் . என்றுமே பெண்கள் அடிமையாகத்தான் இருக்கவேண்டும் என்கின்ற மனோபாவம் இன்னும் மாறவில்லை. எந்த வேலை செய்வதற்கும் பெண் அடுத்தவரை சார்ந்து இருக்க வேண்டிய நிலை இன்னும் மாறவில்லை.


             சரி என்ன செய்வது இந்தகால பெண்களுக்கு ப்யுடி பார்லர் சென்று த்ரெட்டிங் செய்யவும் பேசியல்  செய்யவும்ம்தான் நேரம் இருக்கின்றது அந்த நேரத்தில் ஏதாவது   படிக்கலாம் எழுதலாம் என்றால் முடிவதில்லை. இதனை சொல்வதற்கு ஒரு பெண் என்கின்ற முறையில் எனக்கும் வெட்கமாகத்தான் இருக்கின்றது . இதனைப் படித்துவிட்டு யாரேனும் என்னை திட்டவும் கூடும், கண்ணாடி வீட்டுக்குள்  இருந்து கல் எறிவது போலத்தான் இருக்கின்றது என்ன செய்வது நானும் சொல்லவில்லை என்றால் வேறு யார் சொல்வார்கள்?  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக