ஞாயிறு, 25 மார்ச், 2012

தாமரை இலை தண்ணீர்

தாமரை இலை தண்ணீர்


ஏழாம் வகுப்பில் ஓர் நாள்
அறிவியல் தேர்வு நடந்தது
அறிவியல் வாத்தியார் ரொம்ப
கோவக்கார வாத்தியார்.,

அவர் வச்ச பரிச்சையில
சின்னதா ஒரு கேள்வி

''தாமரை இலையில் நீர் ஒட்டுவதில்லை ஏன்?"

பக்கத்திலிருந்த பையன்
அழகா  எழுதியிருந்தான்  இப்படி

"தாமரை இலை மீது லட்சுமி உட்காருவதால்
தண்ணீர் ஒட்டுவதில்லை"

அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது
தாமரை இலையில மட்டும் இல்லை
கண்ணுல கூட தண்ணீர் நிக்காதுன்னு!

பிரிவு

பிரிவு


நல்லதுதான்
இது நல்லதுதான்

என் இருப்பை உனக்கு சொல்லும்
என் அன்பை உனக்கு சொல்லும்
என் பொறுமையை உனக்கு சொல்லும்
என் தேவையை உனக்கு சொல்லும்
என் அணைப்பை உனக்கு சொல்லும்
என் காதலை உனக்கு சொல்லும்

நல்லதுதான்
இது நல்லதுதான்

இந்த பிரிவினை மட்டும்
நீ தேர்ந்தெடுக்காமல் போயிருந்தால்
நான் யாரென்பதை நீ
உணராமல் போயிருப்பாய்

ஒரு வேளை நீ
உணராதது போல் வேடமிடலாம்

என்றாலும் உன் மனது உனக்கு சொல்லும்

நான் யாரென்பதை !....



வெள்ளி, 2 மார்ச், 2012

மூக்கொழுவி

மூக்கொழுவி



மூக்கொழுவி

 
சின்ன வயசில
தென்னை மட்ட வண்டில
தெரு புழுதில
முடியெல்லாம் மண்ணாகி
ஒடம்பெல்லாம் அழுக்காகி
அருணாகொடி போட்டும் நிக்காத கால் சட்டை
மாட்டிகிட்டு வளையவந்த 
காலங்கள் நினைப்பிருக்கு

எல்லாரும் சேந்து  ஒண்ணா 
விளையாடும் போது    நாங்க
வேண்டாமுன்னு விரட்டிடுவோம்
மூகொழுவி கவிதாவ...

காலம் பல மாறி
காதல் பல தோத்துபுட்டு.,
தாடி வளர்த்து - தாடி எடுத்து
புது காதல் பல தேடி தேடி
கன்னாபின்னான்னு  களைசிருக்க

தேவத ஒருத்தி தென்றலா
தாண்டிப் போனா....

யாருடா அவன்னு  
காதல சொல்லப் போனா

நெத்தி தழும்பு அவ யாருன்னு சொல்லிடுச்சி..

பருவத்துல பன்னியும் அழகும்பாங்க

இல்லங்க

அவ பருவத்துல
பருவமே அழகா  இருந்தது

எப்படி போய் நான் சொல்ல

உன்ன நான் காதலிக்கிறேன்
மூக்கொழு... இல்லை இல்லை.... கவிதான்னு .!