தாமரை இலை தண்ணீர்
ஏழாம் வகுப்பில் ஓர் நாள்
அறிவியல் தேர்வு நடந்தது
அறிவியல் வாத்தியார் ரொம்ப
கோவக்கார வாத்தியார்.,
அவர் வச்ச பரிச்சையில
சின்னதா ஒரு கேள்வி
''தாமரை இலையில் நீர் ஒட்டுவதில்லை ஏன்?"
பக்கத்திலிருந்த பையன்
அழகா எழுதியிருந்தான் இப்படி
"தாமரை இலை மீது லட்சுமி உட்காருவதால்
தண்ணீர் ஒட்டுவதில்லை"
அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது
தாமரை இலையில மட்டும் இல்லை
கண்ணுல கூட தண்ணீர் நிக்காதுன்னு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக