சனி, 4 பிப்ரவரி, 2012

துறவு

துறவு


ஆசையே   துன்பத்தின் வழி.,

புத்தனின் ஆசை.

ஆசை துறக்க சொன்னவனின் ஆசை

ஆசையே துன்பத்தின் வழி.!


எதை துறந்து துறவியாவது?!

உறவுகளை?!
சொத்துக்களை?!
ஆசைகளை?!
உலக நடைமுறைகளை?!

எதை துறந்து துறவியாவது?!

எல்லாம் துறந்து துறவியானாலும்

துறவி என்பதை அணிந்து கொள்கிறோமே?!

துறவி என்ற பட்டம்

அணிவதுதான் துறவோ?!

துறவி என்பதும் துறக்காத வாழ்க்கைதான்!

முற்றும் துறந்தேன்

என்பவனிடம்

துறந்தேன் என்ற சொத்து இருக்கின்றதே !

துறவியையும் துறக்க வழி என்ன?!

இறைவா

உறவு கடந்த வாழ்க்கை கொடு...

துறவு கடந்த வாழ்க்கை கொடு!.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக