திங்கள், 6 பிப்ரவரி, 2012

முன்னுரை

முன்னுரை



இதைத்தான்
உனக்குத் தரவேண்டுமென்று
நீண்ட நாளாய் விரும்பினேன்.

ஒரு கதை.,
ஒரு கவிதை.,
இதோடு நான்!.

எல்லாம் நன்றாய் இருக்கின்றது
என்று நீ சொல்வாய்.,
என்னையும் சொல்வாயா?!



இதுதான்
கடைசி தீக்குச்சி
எதிர்ப்புக் காற்றை மீறி
எரிகின்றேன்.,
உன்னை பற்றவைத்துக்கொள்!.


இங்கேதான்
உன் வாழ்வை ஆரம்பிக்கப் போகின்றாய் .,
உனக்கு என்ன தேவையோ
தேடி எடுத்துக் கொள்.,
நானும்
கீழேதான் கிடக்கின்றேன்!.


இதை கடைசிவரை படித்துக்கொள்.
நீ படிக்காமல் விட்டுவிட்டாலோ,
அல்லது மறந்துவிட்டலோ
உன் பெருமையும் - அருமையும்
உனக்கு
தெரியாமலே போய்விடும்.


முடித்தவுடன்
மறக்காமல் ஒரு முத்தம்கொடு
என் வரிகளுக்காவது  !.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக