வணக்கம்
என் அன்பான சகோதரர்களே - சகோதரிகளே ., யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகுக்கே வழி காட்டியது நம் தமிழ் சமூகம். இன்றோ, தங்க்லீஷ் பேசிக் கொண்டு ., பீசா, பர்கர், என்று சாப்பிட்டு நம் வாழ்க்கை முறையே ஒரு அமெரிக்கன் போல மாற்றிக் கொண்டோம்.
ஏற்கனவே நம் தமிழ் கலாச்சாரம் மதங்களின் படையெடுப்பால் 5000 ஆண்டுகளாகவே நமது தமிழ் கலாச்சாரம் அழிவுற்று., சாதிகளாகப் பிரிந்து இன்று நாம் யார் என்பதே மறந்து வாழ்கின்றோம்.
அதிலும் கடந்த 2000 ஆண்டுகளாகவே வரலாற்றை கவனித்துப் பார்த்தால் அதிகாரங்களில் மதங்களின் ஆதிக்கம் ரொம்பவே ஓங்கி இருப்பது தெரியும்.
நமது குறுந் தெய்வ வழிபாட்டை விட்டு விட்டு கவர்ச்சியான மதங்களின் பின்னே ஓடி ஓடி திராவிடன் என்ற பதம் மறைந்து. நீ என்ன சாதியை சார்ந்தவன் என்று பார்க்கும் இழி பிறவிகளாய் மாறி விட்டோம். ஈதேனும் ஒரு வகையில் ஒரு சாதியை ஒரு சாதி தாழ்ந்தவனை பார்த்து நான் உயர்ந்தவன் என்று மார் தட்டிக் கொண்டதினால் சாதியில் இருந்து அது தரும் போதையில் இருந்து நாம் வெளிவர முடியாமல் இன்னமும் அடிமையாய் இருகின்றோம். என்ன சொல்வது நமது மண்தான் திருக்குறள் கொடுத்தது., மேலும் மதங்களின் படையெடுப்பில் தீயலிட்டு எரிக்கப்பட்ட நம் முன்னோர்களின் புத்தகங்கள் மத ஆக்கிரமிப்பாளர்களுக்கு அச்சத்தைக் கொடுத்தது இன்றோ எல்லா பெருமையும் இழந்து அடிமையாய் நிற்கின்றோம் இந்த நிலை மாறுமா? என் சகோதர - சகோதரிகளே.....
வெளியே வருவோம் இந்த சமூகத்தில் தமிழனின் என்ன என்பதை உலகுக்கு எடுத்து சொல்வோம்.
ALEXANDER PANNEERSELVAM