வெள்ளி, 27 ஜனவரி, 2012

மனசு

மனசு

என்  நீண்ட நாள் சந்தேகம் அது

எல்லோருக்கும் இருக்குமா?!...

எல்லோருக்குள்ளும் இருக்குமா?!...


பொய்யாய் இருக்குமா?!...

கபடாய் இருக்குமா?!...

வஞ்சகம் சூழ்ந்து இருக்குமா?!...

வஞ்சகம் இன்றி இருக்குமா?!...

சுடுகாடாய் இருக்குமா?!....

பூக்காடாய் இருக்குமா?!...

எப்படி இருக்கும்?!....

அருவருப்பாய் இருக்குமா?!...

அன்பாய் இருக்குமா?!...

எப்படி இருக்கும்?!....

மனசு!...


உங்களுக்கும் - எனக்கும்.  


வியாழன், 26 ஜனவரி, 2012

காதலன்

காதலன்

வந்துவிட்டேன்
காதலன் வந்து விட்டேன் ...

காதலை காதலிக்கின்றேன்
காதலரை காதலிக்கின்றேன்

என்னை யாரும் காதலிப்பார்  இல்லையெனினும்
எல்லோரையும் காதலிகின்றேன்

நான் காதலன்

இந்த உலகின் காதலன்
உயிர்களின்   காதலன்.

எட்டி மிதி
வெட்டி போடு
எரித்து கொல்
இன்னும் என்னென்ன  சித்திரவதைகள்  உண்டோ
அத்தனையும் செய்..

உயிர் போகும்  கடைசி வினாடியும்
என் இதழ் பூக்கும் ஒரு புன்னகை

அது என் காதல் சொல்லும்.

ஏனெனில்

நான் இந்த உலகின் காதலன்.


வெள்ளி, 20 ஜனவரி, 2012

கடைசி கடிதம்

கடைசி கடிதம்


கடைசியில் அது நடந்தேவிட்டது.,

என் கடைசி கடிதம் எழுதும் நேரம்...,

நான் 
இது வரை வாழ்ந்த வாழ்க்கை எது?

என்னால் யாருக்கு பயன்?

என்னால் யாருக்கு கேடு?

என் மனசாட்சிக்கு நல்லவனாய்  இருந்தேனா?

இல்லவே இல்லை.. 

இதுதான் வாழ்க்கையா?

போதும் கடவுளே

நல்லதோ - கேட்டதோ.. 

போகட்டும் கடவுளே....

நான்  வாழவேண்டும் என்று நினைத்த

அப்பாவிகள் என்னை மன்னிக்கட்டும்.

நான் போகிறேன்....

யாருக்காக தெரியுமா?

நான் சாக வேண்டும் என்று

ஒரு நொடியேனும் வேண்டிய

நல்ல உள்ளங்களுக்காக .

என்னை குறித்த நல்லவைகள் நிலைக்கட்டும்...

தீமைகள்

என்னோடு மறையட்டும். 


அறுந்ததென்ன?!

அறுந்ததென்ன?!


மணி அறுந்ததென்று
நூலை விட்டுப் போனாய்..,
ஞாபகச் சின்னமாய்
கணையாழியை விடுவது போல!

அதில்
என் மனதை
கோர்த்து வைத்திருக்கின்றேன்!

(பி. கு)
என் மனமும்
அறுந்துவிட்டது..,

அந்த நூலில்கூட  நீ
 பிரிவு மருந்துதான்
தடவி இருந்தாயோ ?!





காதலி காதலை

காதலி காதலை 





காதலி நண்பா..,
உலகத்தில் உள்ளதிலே
கடினமானது எது என்று
அறிந்து கொள்வாய் !

காதலி நண்பா..,
பிரிவின் கொடுமையை
நொடி கூட உணர்த்தும்
என்பதை உணர்ந்து கொள்வாய்.!

காதலி நண்பா..,
அவள் கசக்கி எறிந்த
காகித துண்டு சொத்து பத்திரங்களைவிட
முக்கியமானது என பொதிந்து கொள்வாய்.!

காதலி நண்பா..,
உன் வயது மறக்கும்.,
உன் உணவு மறக்கும்.,
உன் தூக்கம் மறக்கும்.,
உன் உறவு மறக்கும்.,
உன் நட்பு மறக்கும்.,

காதலி நண்பா.,

உன்னை காதலி பிரிந்தாலும்
காதலை காதலி நண்பா..,
உன் மனதுள் வலி இருந்தாலும்
கண்களை ஓரம்
கண்ணீர் துளிர்க்க
காதல் சிரிப்பூ மலரும்.

காதலி நண்பா
காதலியின்  
புறக்கணிப்பு உன்னை ஒரு
உலகம் போற்றும் கவிஞனாக்கும் . 






பெண்ணே

பெண்ணே


நெரிசல் பேருந்தில்
இடித்த உன்னை
தவிர்த்த எனக்கு
நன்றிப் பார்வைகளை
அளித்து விட்டு
மீண்டும் நிற்கின்றாய்
என்னை இடித்து
 நீயோ
பாது காப்பாய் உணர்கிறாய்
நானோ
பரிதவித்து நெளிகிறேன் .!

வியாழன், 19 ஜனவரி, 2012

மரணம்

மரணம்

மரணம்  என்பது
பயமாய் இருக்கிறது எனக்கு .,

மலரின் மரணம் -  விதை
விதையின் மரணம் - உயிர்

நீரின் மரணம் - மேகம்
மேகத்தின் மரணம் - மழை

ஒன்றின் முடிவே அதன் தொடக்கம்

குழந்தையின் மரணம் - இளமை
இளமயின் மரணம் - முதுமை.,

எல்லா உயிர்களிலும்
சிறந்தது மனித உயிரே .,
கருவானது முதல்
விதைப்பதற்கான விதை !

மரணம் என்பது
பயமாய் இருந்தது எனக்கு முன்பு!.



திங்கள், 16 ஜனவரி, 2012

ஜல்லி கட்டு

ஜல்லி கட்டு

உனக்கும் எனக்கும்
தினம் தினம் ஜல்லி கட்டுதான் 

உன்  பார்வை கொம்புகளில் 
காயப்படுகிறேன் .

அடக்குகிறேன் என்கின்ற போர்வையில்
உன்னிடம் தினம் அடங்கி கிடக்கின்றேன்.

வீரன் என்பது எல்லாம்
உன்னிடம் கனவுதான் போலிருக்கின்றது.  
உன் வார்த்தைகளில் மிதி பட்டு 
உன் முத்தகளால் மருந்திடப் படுகிறேன்.

உன்னிடம் தோற்ற எனக்கு 
என்றும் வெற்றிதான்.

வெற்றி உனதும் இல்லை
எனதும் இல்லை...

நமது வெற்றி

நம் ஒவ்வொரு ஜல்லி கட்டும்
நம்மை கட்டும் ஒன்றோடு ஒன்றாக.




  



புதன், 11 ஜனவரி, 2012

காதல் ?!

காதல் ?!

குளிருக்கு  இதமாய்
 உன் பார்வை கொடென்றேன்.
என் இதழ் முத்தம்
கசகின்றதோ?!
எனக் கேட்டு கொதிக்க வைத்தாய்.


சமாதனம் பண்ண
செலவானதெனக்கு பல முத்தங்கள்.


மனதுக்குள் சங்கடம்
கொஞ்சம் உன் கைக்குள்
முகம் புதைக்கவா என்றேன்.
ஏன் என் மடி
வெருக்கின்றதோ என்றாய்!


சமாதானம் பண்ண
செலவானதெனக்கு சில சீண்டல்கள்.


சந்தோசமாய்  இருக்கிறேன் என்று 
உன் நெற்றி முத்தமிட்டேன்
என் இதழ் கசந்தததா
 என கேட்டு தவிக்க வைத்தாய்.


சமாதானம் பண்ண
செலவானதெனக்கு நீண்ட பல இதழ் முத்தங்கள்.


நீ ஒரு புதிர்தான்....


தாகம் என்று சொல்லும் போது உன்  எச்சிலும்.,
மோகம் என்று சொல்லும் போது உன்....


காதலும் மோதலுமாய்
நீயும் - நானும்.
  



செவ்வாய், 3 ஜனவரி, 2012

என் அன்பான சகோதரர்களே - சகோதரிகளே

வணக்கம்
என் அன்பான சகோதரர்களே - சகோதரிகளே ., யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகுக்கே வழி காட்டியது நம் தமிழ் சமூகம். இன்றோ, தங்க்லீஷ் பேசிக் கொண்டு ., பீசா, பர்கர், என்று சாப்பிட்டு நம் வாழ்க்கை முறையே ஒரு அமெரிக்கன் போல மாற்றிக் கொண்டோம்.
    ஏற்கனவே நம் தமிழ் கலாச்சாரம் மதங்களின்  படையெடுப்பால்  5000  ஆண்டுகளாகவே நமது தமிழ் கலாச்சாரம் அழிவுற்று., சாதிகளாகப் பிரிந்து இன்று நாம் யார் என்பதே மறந்து வாழ்கின்றோம்.
    அதிலும் கடந்த 2000 ஆண்டுகளாகவே வரலாற்றை கவனித்துப் பார்த்தால்  அதிகாரங்களில் மதங்களின் ஆதிக்கம் ரொம்பவே ஓங்கி இருப்பது தெரியும்.
    நமது குறுந் தெய்வ வழிபாட்டை விட்டு விட்டு கவர்ச்சியான மதங்களின் பின்னே ஓடி ஓடி திராவிடன்  என்ற பதம் மறைந்து. நீ என்ன சாதியை சார்ந்தவன் என்று பார்க்கும் இழி பிறவிகளாய் மாறி விட்டோம். ஈதேனும் ஒரு வகையில் ஒரு சாதியை ஒரு சாதி தாழ்ந்தவனை பார்த்து நான் உயர்ந்தவன் என்று மார் தட்டிக் கொண்டதினால் சாதியில் இருந்து அது  தரும் போதையில் இருந்து நாம் வெளிவர முடியாமல் இன்னமும் அடிமையாய் இருகின்றோம். என்ன சொல்வது நமது மண்தான் திருக்குறள் கொடுத்தது., மேலும் மதங்களின் படையெடுப்பில் தீயலிட்டு எரிக்கப்பட்ட நம் முன்னோர்களின்  புத்தகங்கள்  மத ஆக்கிரமிப்பாளர்களுக்கு அச்சத்தைக் கொடுத்தது  இன்றோ  எல்லா பெருமையும் இழந்து  அடிமையாய் நிற்கின்றோம் இந்த நிலை மாறுமா? என் சகோதர - சகோதரிகளே.....

      வெளியே வருவோம் இந்த சமூகத்தில் தமிழனின்  என்ன என்பதை உலகுக்கு எடுத்து சொல்வோம்.
                              
                                                                  ALEXANDER PANNEERSELVAM

                                                                                

இலங்கை மண்

இலங்கை மண்
ஷோபனா சின்னதுரை
இலங்கை எம் மக்களை
இம்சிக்கும் மண்,
இதுதான் எங்களின் பூர்வீக மண்ணென்று
இயம்ப முடியத் மண்
இலங்கை மண்.


நாடு கடத்தப் பட்ட ஒரியாக் காரன்
நாடி வந்த இடம் எம் மண்.
நல்ல சோறு
நல்ல வீடு
நல்லாதரவும் கொடுத்து இன்று
நாங்கள்தான்
நாடு கடத்தப்பட்டு
நட்டாற்றில் நிற்கிறோம்.


வந்தாரை வாழ வைத்தோம்
வறியவர்க்கு பொருளளிதோம்
வஞ்சனை செய்வானென்று நினைக்கவில்லை.
வாஞ்சையாய் பார்ததற்குதான்
வயிற்றில் அடித்துவிட்டான் - எங்கள்
வாழ்வை கெடுத்துவிட்டான்.



தாய்மை கொண்டவனை
தாலாட்டி மடி சேர்த்தோம்
தரம் தாழ்ந்து போன அவனோ
தலை  மீது மிதித்துவிட்டான்.


தலை நிமிர்வோம்
தலையெடுப்போம் - இந்த
தரணிக்கே மூத்த குடி
தமிழன் என்று பறையடிப்போம்.


குமரி முதல் இமயம் என் வீடென்று
வரலாறு சொல்கிறதாம்.,
லெமூரிய கண்டம்
தமிழரின் பூமி என்று
ஆய்வுகள் சொல்கிறதாம்.,


ஐயா.,


எங்களுக்கு வரலாறு வேண்டாம்
சொந்தமாய் சிறு குடிசை போதும்
அதிலே நிம்மதியாய் ஒரு வாழ்க்கை வேண்டாம்
நிம்மதியாய் ஒரு மரணம் வேண்டும்.


ஒ.,


உலகமே., 


நாங்கள் அழிக்கப்பட்ட பொது நீ
அழவில்லை.,
இன்றோ அழிவதற்கொன்றும் இல்லை.,


எனக்காய் நீ குரல் கொடுக்க வேண்டாம்
எனக்காய் நீ போராட வேண்டாம்


எனக்கே எனக்கென்று தனியாய் ஒரு வீடு
அதில் பங்கு போட யாரும் வேண்டாம்


நான் செத்தாலும் நீ பார்க்க வேண்டாம்
வாழ்ந்தாலும் நீ பார்க்க வேண்டாம்
நீ சந்தோசமாய் இரு
என்னை நீ மறந்துவிடு


மறக்கப்பட்ட இனமாக இருந்தாலும்
நிம்மதியாய் என்னை சாகவிடு.


நீ  தலைமுறை தலைமுறைக்கும்

நன்றாய் இருப்பாய். 
.







ஞாயிறு, 1 ஜனவரி, 2012

விடியல்

 விடியல்
 அலெக்சாண்டர் பன்னீர்செல்வம்

2012 
பிறந்து விட்டது
ஒரு வருடத்துடன் இன்னொரு வருடம்,
ஒரு  சூரியன் மறைந்து உதிப்பது போல,
உலகம் சுற்றுவது போல.,
இன்னொரு வருடம் பிறந்து விட்டது.

இன்று வரை
மாற்றம் ஏதும் தெரியவில்லை

மற்றொரு நாள் விடிந்திருக்கின்றது  அவ்வளவே..

இதோ மாலையும் ஆகி விட்டது,
இரவும் வரும் - நாளை  பகலும் வரும்...

ஆனால்,

வருமா ஒரு விடியல் 

என் ஈழத்து மண்ணில்

எம்மக்களுக்கு உரித்தான விடியல்?

சிங்களக் காடையன் 
கை பிடித்திழுக்காத விடியல் வேண்டும்.,
எம் மண்ணில் தன் விதை
விதைத்துவிட்டு போனவனின் தோட்டத்தில்
என் விதைகளை  நடும் நாள் வேண்டும்., 

சிதைந்து போன எம் பிஞ்சுகளின்
முகத்தில் நிரந்தர  ஒளி வேண்டும்.
தாயிழந்து - தந்தை இழந்து
வாழ்விழந்து வாழும் என்
தமிழ் சாதி தலை நிமிர்ந்து வாழும்
பொன் நாள் வேண்டும்,

புது வருடம்-
எத்தனையோ சோதிடர்கள்.,
எத்தனையோ சாமியார்கள்  
யாருமே எங்களின் விடியலை
பற்றி சொல்லவில்லை .

பொடியன்கள் இல்லை
இன்று அனைவருமே பொடியன்களாய்
என்று வெடிப்போமோ 
அன்று ஒரு வேளை விடியுமோ ?!.,
இல்லை எங்கள் வாழ்வு முடியுமோ ?!

வெடிப்போம் ஒரு நாள்
அன்று பிறக்கும் எம்மக்களுக்கு
புது வருடம்!.
ஈழத்தில் தமிழன் இருந்தாலும் சரி
முற்றும் ஒழிந்தாலும் சரி 
 பிறக்கும் எம் மக்களுக்கு  விடியல்     
           

தமிழனென்றால்
எங்கு சென்றாலும் அடிதானா?!

என் உலகே உனக்கு 
நாகரிகம் சொன்னவன் நானல்லவா 
உலக பொதுமறை தந்தவன் நானல்லவா

என்ன செய்யட்டும் இன்றோ
உலகுக்கே எல்லாம் தந்த 
என் தமிழனுக்கு
தண்ணீர் தருவதென்றால் 
எல்லோருக்குமே பிடிக்கவில்லை
தமிழென்று பேசாமல்
திராவிடமென்று பேசினோம் 
தமிழனென்று  கூறாமல் 
இந்தியன் என்று கூறினோம்.,
 ஆனால் தண்ணீர் பெறவே போராடினோம்
சக இந்தியனோடு.,
கன்னட சகோதரன்
காவேரியில்   கழுத்தறுப்பான்.,
சுந்தர தெலுங்கு என்றோம் அவனோ
பாலாற்றில் எம் பல்லுடைப்பான்.,
சரி.. சரி...
நல்லவன் என் மனம் பிடித்த 
மலையாளத்து சகோதரன் என்றால் .,
பெரியாரில் சிறியாராகி
எம்மை அடித்து விரட்டுவான்.,

என்றுதான் எம் மண்ணுக்கு விடுதலை?!

சரி பார்ப்போம் இந்த புத்தாண்டாவது
புதியதை தருகின்றதா என்று

அது வரை எமக்கு
எல்லா ஆண்டும்  ஒரே ஆண்டே!.