பிரிவின் சந்தோசம்

என் இருதயத்தில் செருகிய
கத்தியில் உன் பெயர் இருந்தது
நம்புவதற்கு இயலாமல்
குருதியில் நீ இருந்தாய்
என் கண்கள் இருண்டபோது
தூரத்தில் உன் உருவம் தெரிந்தது
உடல் தளர்ந்து வீழ்ந்தபோது
உன் பெயரெழுதிய கத்தி
என்னை தாங்கிக்கொண்டு
முதுகின் வழியாய் வெளி வந்தது
என் நினைவு மறையும் பொழுது
என் செவியில் விழுந்தது
உன் சதோஷ குரலோசை
சிரித்துக் கொண்டேன்
என் காதல் உன்னை இப்பொழுதாவது
சந்தோஷப் படுத்தியதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக