இதயப் பூட்டு
உன்னை விட்டு விலகின
என் காதலுக்கு
இறுதி அஞ்சலி செலுத்தின கையோடு
பேசுகிறேன் உன்னோடு!
என் மீது
உன் பார்வைகள் படர்ந்தும்
படாத உன் இதயம்
நீ
அருகினில் வந்தும்
தொலைவாயிருந்த உன் காதல்.
நீ உயரத்தில் இருந்தாய்
நான் பள்ளத்திலிருந்தேன்,
பின்னாளில்தான் உணர்ந்தேன்.,
நீதான் பள்ளத்தாக்கிலிருந்தாய்,
நான் சிகரத்தில் வீற்றிருந்தேன்
நான் என்னவோ சிதற தயாராகத்தான் இருந்தேன்.,
ஆனால்,
பூகம்பம் உன்னில்தான்
உருவாக வேண்டும்.
இதனை என்றேனும்
படிக்க நேர்ந்தாலும் - நீ
ஏதோ ஒரு எழுத்தென
இகழ்ந்துவிடுவாய் எனத் தெரியும்.
என் காதல்
சரியான சாவிதான்,
ஆனால்,
உன் இதயப் பூட்டோ
துரு பிடித்து உதிர்ந்துவிட்டது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக