நீச்சல்
ஒரு
பூவின் இதழ்களை....
இதழ்களின் வேர்வையை
பனி துளிகளை
நாசி படர நுகர்ந்து .....
தாமரைத் தண்டினை
வளைத்தெடுத்து .,
மலரா மொட்டுகளில் நீந்தி ..,
ஆழக்குளத்தரை தொட்டு .,
மகிழ்ந்து களைத்து
கரையினில் அயர்ந்தேன் .,
பரிவும் உயிரும் கசிய
அன்பாய் அலைகளால்
என்னைத் தடவ
அரைக்கண்கள் திறந்து பார்த்தேன் .,
தளர்ந்த உன் கண்கள்
என் உயிரினை கட்டி
ஆதரவாய் படர்ந்திருந்தது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக