சனி, 21 ஜூலை, 2012

பிரிவு

பிரிவு


தேங்காய் உடைத்து
எல்லோரும் கடை மூடும்
ஒரு வெள்ளிக் கிழமை
என் இதயம் உடைத்து
நம் காதலை மூடினாய் !

குருதியால் எழுதிய
என் கடிதம் கண்டு நீ
கதறி அழுது தோள் சாய்ந்து
" வேண்டாண்டா ,
இப்படி செய்யாதே!"
என்றென்னை அணைத்துக்கொண்டாய் !

ஆற்றோர மாலை சந்திப்பில் ,
விளைந்த நெற் கதிராய்
மடியில் சரித்து என் மீது
கவிழ்ந்து கதைப்பாய்
இதயங்களின் பாச மொழி
இதழ்களில் படிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்!

குளிர் கால சூரியன் போல 
தாமதமாய் வந்து 
சீக்கிரமாய் போய் விடுவாய் ,
கழிந்த  நொடிகளிலும்
சேர்ந்து  களித்த நொடிகளிலும் 
வாழ்ந்து...... வாழ்ந்து.,
சிரித்து ....... சிரித்து .,
நினைத்து ...... நினைத்து.,
உருகி ....... உருகி
கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பேன் .,
அடுத்த சந்திப்பில்
படித்து பாராட்டி தலைகோதி
" என் மீது
இவ்வளவு காதல?!".,
என்று ஆச்சரியம் காட்டி
என் தோள்  புதைவாய்!

திரைப்பட அரங்கின்
மெல்லிய இருட்டில்
விரல்கள்  சேர்த்து இறுக்கி
பிரியோம் என்
உறுதி மொழி எடுத்தோம்!

உன் அம்மாவுடன் வரும்பொழுதும் .,
அப்பாவுடன் வரும்பொழுதும் .,
தம்பியுடன் வரும்பொழுதும்
யாரும் உணரா சாடைகள் மூலம்
உறவினை அறிமுகம் செய்து
மின்னல் வெட்டாய்
குறும்பாய் சிரித்துப் போவாய்!

பிரியோம் ..... பிரியோம்  என 
நான் இருமர்ந்திருந்த பொழுதினில்தான் 
நீ............... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக