இலங்கை மண்
ஷோபனா சின்னதுரை
இலங்கை எம் மக்களை
இம்சிக்கும் மண்,
இதுதான் எங்களின் பூர்வீக மண்ணென்று
இயம்ப முடியத் மண்
இலங்கை மண்.
நாடு கடத்தப் பட்ட ஒரியாக் காரன்
நாடி வந்த இடம் எம் மண்.
நல்ல சோறு
நல்ல வீடு
நல்லாதரவும் கொடுத்து இன்று
நாங்கள்தான்
நாடு கடத்தப்பட்டு
நட்டாற்றில் நிற்கிறோம்.
வந்தாரை வாழ வைத்தோம்
வறியவர்க்கு பொருளளிதோம்
வஞ்சனை செய்வானென்று நினைக்கவில்லை.
வாஞ்சையாய் பார்ததற்குதான்
வயிற்றில் அடித்துவிட்டான் - எங்கள்
வாழ்வை கெடுத்துவிட்டான்.
தாய்மை கொண்டவனை
தாலாட்டி மடி சேர்த்தோம்
தரம் தாழ்ந்து போன அவனோ
தலை மீது மிதித்துவிட்டான்.
தலை நிமிர்வோம்
தலையெடுப்போம் - இந்த
தரணிக்கே மூத்த குடி
தமிழன் என்று பறையடிப்போம்.
குமரி முதல் இமயம் என் வீடென்று
வரலாறு சொல்கிறதாம்.,
லெமூரிய கண்டம்
தமிழரின் பூமி என்று
ஆய்வுகள் சொல்கிறதாம்.,
ஐயா.,
எங்களுக்கு வரலாறு வேண்டாம்
சொந்தமாய் சிறு குடிசை போதும்
அதிலே நிம்மதியாய் ஒரு வாழ்க்கை வேண்டாம்
நிம்மதியாய் ஒரு மரணம் வேண்டும்.
ஒ.,
உலகமே.,
நாங்கள் அழிக்கப்பட்ட பொது நீ
அழவில்லை.,
இன்றோ அழிவதற்கொன்றும் இல்லை.,
எனக்காய் நீ குரல் கொடுக்க வேண்டாம்
எனக்காய் நீ போராட வேண்டாம்
எனக்கே எனக்கென்று தனியாய் ஒரு வீடு
அதில் பங்கு போட யாரும் வேண்டாம்
நான் செத்தாலும் நீ பார்க்க வேண்டாம்
வாழ்ந்தாலும் நீ பார்க்க வேண்டாம்
நீ சந்தோசமாய் இரு
என்னை நீ மறந்துவிடு
மறக்கப்பட்ட இனமாக இருந்தாலும்
நிம்மதியாய் என்னை சாகவிடு.
நீ தலைமுறை தலைமுறைக்கும்
நன்றாய் இருப்பாய்.
.
ஷோபனா சின்னதுரை
இலங்கை எம் மக்களை
இம்சிக்கும் மண்,
இதுதான் எங்களின் பூர்வீக மண்ணென்று
இயம்ப முடியத் மண்
இலங்கை மண்.
நாடு கடத்தப் பட்ட ஒரியாக் காரன்
நாடி வந்த இடம் எம் மண்.
நல்ல சோறு
நல்ல வீடு
நல்லாதரவும் கொடுத்து இன்று
நாங்கள்தான்
நாடு கடத்தப்பட்டு
நட்டாற்றில் நிற்கிறோம்.
வந்தாரை வாழ வைத்தோம்
வறியவர்க்கு பொருளளிதோம்
வஞ்சனை செய்வானென்று நினைக்கவில்லை.
வாஞ்சையாய் பார்ததற்குதான்
வயிற்றில் அடித்துவிட்டான் - எங்கள்
வாழ்வை கெடுத்துவிட்டான்.
தாலாட்டி மடி சேர்த்தோம்
தரம் தாழ்ந்து போன அவனோ
தலை மீது மிதித்துவிட்டான்.
தலை நிமிர்வோம்
தலையெடுப்போம் - இந்த
தரணிக்கே மூத்த குடி
தமிழன் என்று பறையடிப்போம்.
குமரி முதல் இமயம் என் வீடென்று
வரலாறு சொல்கிறதாம்.,
லெமூரிய கண்டம்
தமிழரின் பூமி என்று
ஆய்வுகள் சொல்கிறதாம்.,
ஐயா.,
எங்களுக்கு வரலாறு வேண்டாம்
சொந்தமாய் சிறு குடிசை போதும்
அதிலே நிம்மதியாய் ஒரு வாழ்க்கை வேண்டாம்
நிம்மதியாய் ஒரு மரணம் வேண்டும்.
ஒ.,
உலகமே.,
நாங்கள் அழிக்கப்பட்ட பொது நீ
அழவில்லை.,
இன்றோ அழிவதற்கொன்றும் இல்லை.,
எனக்காய் நீ குரல் கொடுக்க வேண்டாம்
எனக்காய் நீ போராட வேண்டாம்
எனக்கே எனக்கென்று தனியாய் ஒரு வீடு
அதில் பங்கு போட யாரும் வேண்டாம்
நான் செத்தாலும் நீ பார்க்க வேண்டாம்
வாழ்ந்தாலும் நீ பார்க்க வேண்டாம்
நீ சந்தோசமாய் இரு
என்னை நீ மறந்துவிடு
மறக்கப்பட்ட இனமாக இருந்தாலும்
நிம்மதியாய் என்னை சாகவிடு.
நீ தலைமுறை தலைமுறைக்கும்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக