புதன், 11 ஜனவரி, 2012

காதல் ?!

காதல் ?!

குளிருக்கு  இதமாய்
 உன் பார்வை கொடென்றேன்.
என் இதழ் முத்தம்
கசகின்றதோ?!
எனக் கேட்டு கொதிக்க வைத்தாய்.


சமாதனம் பண்ண
செலவானதெனக்கு பல முத்தங்கள்.


மனதுக்குள் சங்கடம்
கொஞ்சம் உன் கைக்குள்
முகம் புதைக்கவா என்றேன்.
ஏன் என் மடி
வெருக்கின்றதோ என்றாய்!


சமாதானம் பண்ண
செலவானதெனக்கு சில சீண்டல்கள்.


சந்தோசமாய்  இருக்கிறேன் என்று 
உன் நெற்றி முத்தமிட்டேன்
என் இதழ் கசந்தததா
 என கேட்டு தவிக்க வைத்தாய்.


சமாதானம் பண்ண
செலவானதெனக்கு நீண்ட பல இதழ் முத்தங்கள்.


நீ ஒரு புதிர்தான்....


தாகம் என்று சொல்லும் போது உன்  எச்சிலும்.,
மோகம் என்று சொல்லும் போது உன்....


காதலும் மோதலுமாய்
நீயும் - நானும்.
  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக