இதயத்தின் மௌனம்
என்
இதயத்தின் ஆழத்தில்
உன் காதல் தூங்குகின்றது!
உன்
இதயத்தின் ஆழத்தில்
என் காதல் மரணிக்கின்றது !
என் செவிகளில்
உன் பேச்சும்,
என் இதழ்களில்
உன் பெயரும்!
நீயோ
உன் செவிகளை அடைத்துக்கொண்டு
வார்த்தைகளால் வசை பாடுகின்றாய்!
உன் பிரிவின் துயரத்தை
உன் காதல் உணரா வண்ணம்
என் இதயத்தில் அமைதியாய்
உறங்க வைத்திருகின்றேன் !
நீயோ போய்விட்டாய்
கண் முன்னே உயிர் பிரிவது போல
நீ போய் விட்டாய்
போருக்கு பிந்தைய அமைதியாய்
என் மனம்
மௌன பாடல்களோடு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக