திங்கள், 13 பிப்ரவரி, 2012

இதயத்தின் மௌனம்

இதயத்தின் மௌனம்


என்
இதயத்தின் ஆழத்தில்
உன் காதல் தூங்குகின்றது!

உன்
இதயத்தின் ஆழத்தில்
என் காதல் மரணிக்கின்றது !

என் செவிகளில்
உன் பேச்சும்,
என் இதழ்களில்
உன் பெயரும்!

நீயோ
உன் செவிகளை அடைத்துக்கொண்டு
வார்த்தைகளால் வசை பாடுகின்றாய்!

உன் பிரிவின் துயரத்தை
உன் காதல் உணரா வண்ணம்
என் இதயத்தில் அமைதியாய்
உறங்க வைத்திருகின்றேன் !

நீயோ போய்விட்டாய்

கண் முன்னே உயிர் பிரிவது போல
நீ போய் விட்டாய்

போருக்கு பிந்தைய அமைதியாய்
என் மனம்
மௌன பாடல்களோடு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக