புதன், 8 பிப்ரவரி, 2012

பயணம்

பயணம்


இருவூரிலிருது
ஒருவூர் வந்தேன்

 கருவூரில் வளர்ந்து
வெளியூர் குடி புகுந்தேன்

வெளியூர் வந்தபின்னே
என்னூராய் ஆக்கிக் கொண்டேன்

எண்ணூரில் எத்தனையோ
பயணிகளை நான்
கண்டேன்,
பழகினேன்,
சண்டையிட்டேன்,
சமாதானம் சொன்னேன்,

என்னூரிளிருந்து
மேலூர் செல்லும் நாள் வந்தது

அப்போதுதான்
கீழூர் போகிறாயா?!
மேலூர் போகிறாயா?!
என்று கேட்டார்கள்...

அடடா

இத்தனை நாளும்
எவ்வூர் போவதென்று
எம்முடிவும் எடுக்கவில்லையே!...

திசை கெட்டு
அலைந்து விட்டேன்

எவ்வழி
 நான் செல்லும் வழியென்று
தெரியாமல் விழித்தேன்

தமிழ் முன்னோடி ஒருவன் சொன்னான்

" யாதும் ஊரே
யாவரும் கேளீர் "

என்று நீ வாழ்ந்திருந்தால்
மேலூர் உனது .

இன்றேல் கீழூர்  உனது..






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக