வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

சுதேசி

சுதேசி



டாலர் நம்மை விழுங்கிவிட்டது
பரபரப்பாய் அலைந்து
பணத்தைத் தேடி நம்மை
தொலைத்து விட்டோம்!

சுதேசி பிரச்சாரகர்களின் 
விதேசி மகிழுந்து ஊர்வலம்
தைக்கப்பட்ட வாய்களோடு
பாமாலை பாடுகிறது

சாதியொழிப்பு போராட்டத்தில்
திராவிடம் அழிந்து ஆரியம் தளிர்க்க
திராவிட தலைவர்களின்
மஞ்சள் துண்டு ஊர்வலம்!

புரட்சிக்காரர்கள்
தீவிரவாதிகளாக காட்டில்.,
கொள்ளைக்காரர்கள்
அரசியல்வாதிகளாக நாட்டில்.!

மன்னராட்சி அழிந்து
மக்களாட்சி மலர்ந்த தேசம் .,
நாட்டை ஆள இங்கு
புதிய புதிய மன்னர்கள்!

அதிகாரங்கள் நொறுக்கும் விரல்கள்
ஐந்து வருடங்கள் துருபிடித்து கிடக்க.,
தொலைத்த நம்மை அடிமையாய் கண்டு
மீட்டெடுத்து மீண்டும் தொலைத்துவிட்டோம்!.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக