திங்கள், 6 பிப்ரவரி, 2012

என்னுள் கையெழுத்திட்டவள்

என்னுள் கையெழுத்திட்டவள்
ப.அலெக்சாண்டர்


தேனீர் அருந்தென்றால்
என் கண்ணீரே
உனக்குப் போதுமென்கின்றாய்.,

வார்த்தைகளோடு போராடலாம்
மௌன உணர்வுகளோடு போராட முடியாது.
நான் உன்னுடன் மௌன
உணர்வுகளோடு போராடிக் கொண்டிருக்கின்றேன்.,

இன்னும் எத்தனை காலம் என்னை
பட்டினி போடப் போகின்றாய்?!

என் உள்ளமும் -  உடலும்
ஒடுங்கிக்கொண்டிருக்கின்றது.,

நீதான் நான்  கேட்கும் கீதம்,
நான் பாடும் சங்கீதம்.

ஆனாலும், நீ எனக்கு வராத ராகம்,.
 என்றாலும் பாடுகிறேன்,
வராமலா போய்விடுவாய்?!...

 நீ

என்னுள் கையெழுத்திட்டவள்,
சற்று அழுத்தமாய் கையெழுத்திட்டாயோ ?!....
என் இதயம் கிழிந்து போனது
உன் ஞாபகங்களை சுமந்து .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக