வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

மௌனம்

மௌனம்  ஷோபனா சின்னதுரை

மௌனம் உன் இதழ்களில்
இருக்கின்றது!

உன் விழிகளில் இல்லை!

இதழ் மூடி
இத்தனை வார்த்தைகள்
உன்னால் மட்டுமே
பேச முடியும்!

தொலைபேசி அழைப்புகளில்  கூட
மௌனமாய் நீ இருந்தால்
எங்கனம் அறிவேன் நான்
உன் விழி மொழிகளை?!

ஆனால்,

"உன்னை கடந்து வந்த காற்று சொன்னது
அப்பப்பா அவள் இமை பேசும் வேகத்தில்
எனக்கு மூச்சு முட்டியது
உன்னிடம்தான் அவள்
பேசி கொண்டிருந்தாளோ?!"

மெல்ல சிரித்துக் கொண்டேன்

அவள் இமை  பேசியதையே
தாங்கமுடியாத காற்றுக்குத் தெர்யுமா
அவள் என் இதயத்தில்
பேசிக்கொண்டிருப்பது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக